கோபாலப்பட்டிணம் ஜுமுஆ பள்ளிவாசல் முன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபரி மஸ்ஜித் இடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை கண்டித்து இன்று 02/10/2010 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களுக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஜுமுஆ மஸ்ஜித் பள்ளியின் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தலைவர் ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
SDPI கட்சியின் துணை செயலாளர் ஜின்னா உட்பட பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவர்களும் கலந்துகொண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளின் விடுதலையை கண்டித்தும், நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை போய்விடும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.