கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் விசைப்படகு மூலம் கரை பகுதியில் மீன்பிடிப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடல் அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், கடலோர காவல் குழுமம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் மீன்வள மேற்பார்வையாளர் செல்வேந்திரன், சதீஷ் ஆகியோர் ரோந்து படகு மூலம் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது புதுப்பட்டினம் மீனவ கிராமத்தில் 2 கடல் மைல் தொலைவில் கரை பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் சோழியக்குடி பகுதியை சேர்ந்த விசைப்படகு ஒன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அங்கு சென்ற அதிகாரிகள் விசைப்படகு மூலம் 5 மைல் தூரத்தை தாண்டி தான் மீன்பிடிக்க வேண்டும் என்று விதி இருக்கும் போது, 2 மைல் தொலைவில் மீன் பிடித்ததாக கூறி அந்த விசைப்படகை பறிமுதல் செய்து, அதில் இருந்த 6 மீனவர்களையும் அழைத்துக் கொண்டு கோட்டைப்பட்டினம் மீன்பிடிதளத்திற்கு வந்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.