ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் ஆரோக்கியதாஸ் என்பவரை கடந்த 29-ந் தேதி திருக்கோகர்ணம் அருகே போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சா மற்றும் கார், செல்போனை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தப்பியோடிய மணமேல்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது38) என்பவரையும், கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடி வந்தனர். மேலும் இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ரமேஷ், அறந்தாங்கியை சேர்ந்த சகுந்தலா (32) , அரிமளத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (22) மற்றும் ஏற்கனவே கைதான ஆரோக்கியதாசின் மனைவி சிவகாமி (40) , அவரது மகன் ஆனந்த் (22) ஆகிய 5 பேரையும் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 1 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.