புரட்டாசி மாதம் எதிரொலி: ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை



புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீன்கள் அதிகளவு கிடைக்காததாலும், புரட்டாசி மாதமாக இருப்பதாலும் மீன்கள் போதிய அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால், மீனவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். 

இதன் காரணமாக ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என்று முடிவு செய்து அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments