கீழக்கரையைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்பதற்காக மிதக்கும் சைக்கிளை வடி வமைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த இரட்டையர்கள் நசுருதீன் (25), அசாருதீன் (25). ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இருவரும் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆதரவற்ற சடலங்களை மீட்டு அடக்கம் செய்வது, நீர்நிலைகளில் மூழ்கியவர்களை மீட்பது, கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் வகையில், தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளனர். இதில் 12 தண்ணீர் கேன்கள், இரும்புக் கம்பிகள், சைக்கிள் சக்கரங்கள், படகுகளைப் போன்று புரொபெல்லர் கொண்டு தயாரித்துள்ளனர்.
இதில் 180 கிலோ எடை வரை கொண்டு செல்லலாம். இந்த மிதவை சைக்கிள் 10 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனை கடல் மற்றும் குளங்களில் மூழ்குபவர்களை மீட்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தச் சைக்கிளை கீழக்கரை கடலில் மிதக்கவிட்டு சோதனை செய்தனர். இந்தச் சைக்கிளில் 3 பேர் செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சகோதரர்களுக்கு கீழக்கரை பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து நசுருதீன் கூறுகையில், இந்த சைக்கிளை மேம்படுத்தி பெட்ரோல், டீசலில் இயக்கும் விதமாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.