பலத்த காற்று வீசுவதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.!



புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் சுமார் 750 விசைப்படகுகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. தினந்தோறும் எண்ணற்ற மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கடல் பகுதியில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்வளத்துறை சார்பாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments