ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் 33 நாடுகளுக்கு சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் விமான சேவையை தொடங்கவுள்ளதாக சவுதி கெஸட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் கொச்சி, மும்பை, டெல்லி ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே தற்போது விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா வைரஸ் பயண விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SAUDI ARABIAN AIRLINES (SAUDIA) WILL RESUME SERVICES TO 33 INTERNATIONAL DESTINATIONS IN NOVEMBER. HTTPS://T.CO/34YPV2VAML
— SAUDI GAZETTE (@SAUDI_GAZETTE) OCTOBER 24, 2020
மேலும் ஆம்ஸ்டர்டாம், பிராங்பேர்ட், லண்டன், மாட்ரிட், பாரிஸ் மற்றும் இஸ்தான்புல் மற்றும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், அடிஸ் அபாபா, அலெக்ஸாண்ட்ரியா, கெய்ரோ, கார்ட்டூம், நைரோபி மற்றும் துனிசியா மற்றும் – டெல்லி, டாக்கா, குவாங்சோ, இஸ்லாமாபாத், ஜகார்த்தா, கராச்சி, கொச்சி, கோலாலம்பூர் லாகூர், மணிலா, முல்தான், மும்பை மற்றும் பெஷாவர் மற்றும் மத்திய கிழக்கில் ஆறு இடங்கள் – அம்மன், அபுதாபி, பஹ்ரைன், பெய்ரூட், குவைத் மற்றும் துபாய். ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.