SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு






SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு


சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)- ன் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மணமேல்குடி ஒன்றியம், P.R பட்டினத்தில் 22-10-2020 அன்று நடைபெற்றது.
    
இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

 இக்கூட்டத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.

தொகுதி கமிட்டி     
     
இக்கூட்டத்தில் அறந்தாங்கி தொகுதி கமிட்டி அமைக்கப்பட்டது.
கமிட்டியின் தலைவராக கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஹனீபா அவர்களும், அம்மா பட்டினத்தைச் சேர்ந்த நவாப் அவர்கள் செயலாளராகவும், கோபால பட்டினத்தைச் சேர்ந்த கலந்தர் பொருளாளராகவும், இணைச் செயலாளர்களாக கோபால பட்டினத்தை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் அம்மா பட்டினத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் SDPI கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் அரபாத் மற்றும் பொதுச் செயலாளர் செய்யது ஆகியோர் மேற்பார்வையாளர்களாக மொத்தம் 7 பேர் குழு அமைக்கப்பட்டது.

தேர்தல் பணிக்குழு

 மேலும் இக்கூட்டத்தில்  7 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் தலைவராக அரபாத் அவர்களும், செயலாளராக செய்யது அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அக்குழுவில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த ஹனிஃபா, கலந்தர், சாகுல் ஹமீது மற்றும் அம்மா பட்டினத்தை சேர்ந்த நவாப், இஸ்மாயில் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தின் இறுதியில் துணைத்தலைவர் அரபாத் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments