சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் நேரடியாக அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயிற்சியில் சேரலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், மாதாந்திர உதவித்தொகை ரூ. 500 என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
விவரங்களுக்கு: 044 22501350, 22501982, 9499055651, 9499055649
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.