புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் 70-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 17.11.2020 அன்று கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் முஹ்யித்தீன் ஆண்டகை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் புதுக்கோட்டை மாவட்ட உலமா சபையின் 70-வது பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி,அல்ஹாஜ் S.லதக்கத்துல்லாஹ் உலவி ஹழ்ரத், புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அவர்கள் தலைமையில் மௌலவி, ஹாபிழ் H.அப்துல் ஹக் அன்வாரி ஹழ்ரத் அவர்கள் கிராஅத் ஓதிய பின்பு, மௌலவி,ஹாபிழ் S.A.ஜாஃபர் அலி உலவி ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்ற இனிதே துவங்கி நடைபெற்றது.
இறுதியாக பொதுக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.மாவட்டம் தழுவிய மீலாது விழா&சமய நல்லிணக்க விழா கடற்கரை வட்டாரத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
2.மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் மூன்று வருடங்களுக்குப் பொறுப்பு வகிப்பதாக மாவட்ட உலமா பெருமக்களால் முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இமாம்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.