புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாய ‘தனிமை’ அமலில் இருந்த நிலையில், தற்போது அந்த முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தீவரம் அதிகமாக இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து மத்திய அரசால் அழைத்து வரப்பட்டவர்கள், சொந்த முறையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள் தங்களது வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் இருந்தது. அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் சுகாதாரத் துறையிடம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டில் இருந்து விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும், ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், ‘வெளிநாட்டு பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் எதிர்மறை (நெகடிவ்) உள்ளவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் இருந்தது. இப்போது அந்த விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு விமான நிலையத்தில் சோதனை நடத்தி, அவர்களுக்கு நெகடிவ் ரிசல்ட் வந்தால், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து, மாநில அரசுகள் தங்களின் தேவைக்கேற்ப மேற்கண்ட விதிகளை மாற்றிக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.