தினமும் 2 முறை பல் துலக்கினால் பல், வாய் தொடர்பான 80 சதவீத நோய்களைத் தடுக்க முடியும் என்று சென்னை அரசு பல் மருத்துவமனை டீன் மருத்துவர் விமலா தெரிவித்தார்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய பல் துலக்குதல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், இணையவழி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல் துலக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு பற்களை எப்படி துலக்க வேண்டும். ஒழுங்கற்ற பல் துலக்குதல் முறையால் உண்டாகும் வாய் மற்றும் பல் தொடர்பான நோய்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் மருத்துவர் விமலா கூறியதாவது:
ஆண்டுதோறும், பல் துலக்குதல் தினத்தில் அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு பல் துலக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணத்தால் மாணவர்களுக்கு இணையவழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுபோல், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முறையாக பல் துலக்கினால் பல நோய்களைத் தவிர்க்கலாம். 80 சதவீத பல், வாய் தொடர்பான நோய்கள் வருவதற்கு முறையாக பல் துலக்காததே முக்கிய காரணமாக உள்ளது. பெற்றோர், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு தெரிந்தால்தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் காலை மற்றும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு என 2முறை கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். குறைந்தது 2 நிமிடமாவது பல் துலக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.