ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ரோஜாராணி. இந்த நிலையில் ரோஜாராணி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வெங்கடேஸ்வரன் மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு திடீரென்று இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார்? அங்கு அவருக்கு என்ன நடந்தது? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. அதன் உண்மை நிலையை கண்டறிவதோடு எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். வறுமையில் வாடும் எனக்கு அரசு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.