GPM மீடியா செய்தி எதிரொலி: கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) நேரில் ஆய்வு.!



GPM மீடியா செய்தி எதிரொலியாக கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) நேற்று 18.11.2020 கோபாலப்பட்டிணத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் கடற்கரையில் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை.!! என கடந்த 16.11.2020 அன்று GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக நேற்று கோபாலப்பட்டிணத்திற்கு கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) அவர்கள் வருகை புரிந்தார்கள். 

அதனடிப்படையில் கோபாலப்பட்டிணத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டார். அதன் பிறகு கூறுகையில் கோபாலப்பட்டிணத்தில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டதின் அடிப்படையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 18 மின்கம்பங்களை மாற்றுவதற்கு புதிய மின்கம்பங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் கூறுகையில் ஆள் பற்றாக்குறை காரணமாக புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், கூடிய விரைவில் புதிய மின்கம்பம் அமைப்பதாக கூறினார். 

மேலும் கோபாலப்பட்டிணத்தில் வீடுகளில் இருக்கும் மரங்கள் மின் ஒயர்களில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், குறைந்தழுத்த மின்சாரம் வருவதாக குற்றம்சாட்டினார். இதனால் மின் ஒயர்களில் உரசும் படி உள்ள மரக்கிளைகளை அகற்ற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி GPM மீடியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆய்வின் போது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்சா, 5-வது வார்டு உறுப்பினர் அவர்களின் கணவர் ரபீக், அபு மற்றும் கேப்டன் யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்மூலம் எங்கெல்லாம் மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுகின்றதோ அவைளை அகற்ற GPM மீடியா வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கொள்கின்றோம்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆய்வு மேற்கொண்ட கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) அவர்களுக்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments