தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தும் பணி நடந்து வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கலெக்டர் பங்களா எதிரே உள்ள பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார்.
அப்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் தனது பெயரை பார்த்தார். அப்போது அதில் உமா மகேஸ்வரியின் பெயரில் கடைசி எழுத்தில் ‘ரி‘க்கு பதிலாக மி போன்று பிழை இருந்தது. அப்போது அதனை திருத்த அங்கிருந்த பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் பெயரை திருத்துவதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கிச் சென்றார்.
இதற்கிடையில் புதுக்கோட்டையில் இதற்கு முன்பு கலெக்டராக பணியாற்றிய கணேஷ் பெயரும் அதில் இருந்தது. அதனையும் பார்த்த அவர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் கலெக்டரின் பெயர் பிழை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.