மீமிசல் பகுதியை சேர்ந்த வாடகை வாகன உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆண்டுதோறும் நாங்கள் அரசுக்கு எப்.சி, சாலைவரி, இன்சூரன்ஸ் போன்ற கட்டணங்களை செலுத்தி தொழில் செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் தொழில் செய்யும் இடத்தில் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குறைந்த வாடகை கட்டணத்தில் வாகனங்களை இயக்குவதால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பில் வாழ்வாதரத்தை இழந்த நிலையில் சொந்தவாகனங்கள் வைத்திருப்பவர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மீமிசல் பகுதியில் ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.