வங்க கடலில் உருவாகி உள்ள ‘நிவர்’ புயல் இன்று (புதன்கிழமை) மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட் டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதியில் புயல் முன் னெச்சரிக்கை நட வடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த முன் னெச்சரிக்கை ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட் டனர். மீன்வளத் துறையினர் சார்பாக இப் பகுதியில் உள்ள படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப் பட்டது.
![]() |
கோட்டைப்பட்டினத்தில் உள்ள கடற்கரை பூங்காவில் புயல் காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது |
அதன் அடிப்படையில் புதுக்குடி, கோட்டைப்பட்டினம், அய்யம்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம், முத்துக் குடா ஆகிய பகுதிக ளில் உள்ள நாட்டுப்படகுகள் கடலுக்கு அருகே உள்ள ஆற்று பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் நாட்டுப்படகு இல்லாமலும், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது.
![]() |
அய்யம்பட்டினம் பகுதியில் உள்ள நாட்டுப்படகுகள் ஆற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது |
இதேபோல் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் பாதுகாப் பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மீன்பிடி துறை முகங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப் பட்டது. இந்த பகுதிகளில் கருவாடுக்காக உலர்த்தப்பட்ட மீன்களை அள்ளும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப் பட்டது.
மணமேல்குடி பாக்ஜல சந்தி கடல்பகுதி நேற்று காலை முதல் சீற்றத்துடன் காணப் பட்டது. கடலில் காற்று புயலாக வீசியது. கடல் அலையும் அதிகமாக காணப் பட்டது. மேலும் கடலில் காற்று அதிகமாக வீசியதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் மீனவர்கள் படகு களை இடைவெளிவிட்டு நிறுத்தி வைத்தனர். பொன் னகர் மீன்பிடி தளம் வெறிச் சோடி காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.