புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்... கலெக்டர் தகவல்.!!



மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1-ம் வகுப்பு முதல் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடனும், 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், முந்தைய வகுப்பில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடனும் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 9-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1-ம் அவர்களது வாசிப்பாளர்களின் விபரம் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 10-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு 04322- 223678 என்ற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments