TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு பயான் மற்றும் ஜனாஸா பயிற்சி வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நேற்று (17.11.2020) அஸர் தொழுகைக்கு பிறகு 4 மணி முதல் 5.40 மணி வரை தவ்ஹீத் மர்கஸ்ஸில் பெண்களுக்கான சிறப்பு பயான் மற்றும் ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடந்த பெண்களுக்கான சிறப்பு பயானில்  கிளை தலைவர் அப்துல் ரசாக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதை தொடர்ந்து ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் ஜனாஸா குளிப்பாட்டும் முறை கஃபனிடும் முறை  தொழுகும் முறை அடக்கம் செய்யும் முறை வகுப்புகள் நடைபெற்றது.

இதில் ஜென்னத்துல் பிர்தௌஸ் DISC  அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்...

இதில் அதிகமான சகோதரிகளும் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.

"நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்"(அல் குர்ஆன் 62:8)

என்றும் மார்க்கப்பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments