விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட கத்தலூர் ஊராட்சி ரோட்டாத்துப்பட்டி மற்றும் குளத்தாத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் தெரிவித்தும் மின் மோட்டார் சரி செய்யப்படவில்லை. இதனால், கடந்த பல நாட்களாக போதிய குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு அருகில் உள்ள கிணற்றிலும், குளத்திலும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் மின்மோட்டார் சரிசெய்யப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை(அதாவது இன்று) குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
அதனை ஏற்று, குடிநீர் பிரச்சினை மற்றும் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.