புரெவி புயல் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வேண்டுகோள்.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜிசரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
  • மின்சாதனங்களை கையாளும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
  • மேலும் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • மேலும் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் மழை காரணமாக ஈரப்பதமான வீட்டுச்சுவர்கள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.
  • வாகனங்களை மரங்களின் அருகில் நிறுத்துவதை தவிர்க்கவும், இடியும் தருவாயில் உள்ள பழுதடைந்த மற்றும் உறுதித்தன்மையில்லாத பழைய வீடுகள், கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க அறிவுறுத்தப்படுகிறது. 
மேலும் மழையின் காரணமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால்   1) காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 94429-86179   2] ஹலோ போலீஸ் எண் 72939-11100 3) மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04322-222207 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜிசரவணன் தனது செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments