மரண அறிவித்தல்: (தஞ்சாவூரில்) கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த KKO.பாத்திமா பீவி அவர்கள்...




கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த KKO.அப்துல் கபீர், KKO.ஹுமாயுன் கபீர், KKO.அன்வர் கபீர், KKO.யாசின் கபீர் ஆகியோரின் தாயார் பாத்திமா பீவி அவர்கள் இன்று 10.12.2020 வியாழக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (11-12-2020) வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு தஞ்சாவூர் ஆத்துபாலம் ஜுமுஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜனாஸா இருப்பிடம்:  அருளானந்தா நகர், எட்டாவது குறுக்கு , வாட்டர் டேங்க் எதிரில் தஞ்சாவூர்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments