மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடியாக திருத்தங்கள் செய்து நாடாளுமன்ற தேர்தல் முதல் பல்வேறு மாநில தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பாஜக பெற்று வருகிறது என பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலதரப்பினர் குற்றஞ்சாட்டி EVM-ஐ தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய கோரியும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த கோரியும் அதிராம்பட்டினத்தில் இன்று மாலை அதிரை மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு குழு சார்பில் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அத்தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிரை மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் A.J. ஜியாவுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது ஈவிஎம் மிஷினை தடை செய்ய தேர்தல் ஆணையமும், அரசும் மறுக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த மக்களும் வாக்களிப்பதை மறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவ்வாறான நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் எல்லாவற்றையும் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், புரவலர்கள், தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.