தப்லீக் ஜமாத் வழக்கு: வெளிநாட்டினர் 36 பேரும் விடுவிப்பு! - போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்




இந்த வழக்கில் ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலைய விசாரணை அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கிய கடந்த மார்ச்சில் நடந்த டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டம் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில், மூடப்பட்ட ஓர் அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்ததால் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியது என போலீஸார் குற்றம்சாட்டினர். 

அதையடுத்து, டெல்லி நிஜாமுதீன் பகுதியிலிருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்ததாக 236 பேரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். மேலும், 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா முகமது சாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சூடான், துனிசியா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த, தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 952 பேர் மீது `கொரோனா பரவலுக்குக் காரணமானவர்கள்’ என வழக்கு தொடரப்பட்டது. இதில், 900-க்கும் மேற்பட்டோர் அவர்களது குடும்பத்தினருடன் இணைய விருப்பம் தெரிவித்து, நீதிமன்ற அனுமதியுடன் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments