மதுரையில் 9 மாத குழந்தை ஒன்று தலைவலி பாட்டில் மூடியை விழுங்கியது. தொண்டைக் குழியில் சிக்கிய அந்த மூடியை அறுவை சிகிச்சை செய்யாமலேயே பாதுகாப்பாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
மதுரை அருகே கருமாத்தூர் செல்லம்பட்டி குண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் இளமுருகன். இவரது ஒன்பது மாத ஆண் குழந்தை ஆதித்யன். இந்தக் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த தலைவலி தைல பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியுள்ளது.
அந்த மூடி, குழந்தையின் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது. குழந்தை வலியால் துடித்தது. சரியாக சாப்பிட முடியாமல், தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர், குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
காதுமூக்கு தொண்டைப்பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் தினகரன், உதவிப் பேராசிரியர் டாக்டர் நாகராஜகுருமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்து குழந்தையின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த மூடியை பாதுகாப்பாக சிகிச்சை அளித்து வெளியே எடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.
தற்போது குழந்தை நலமுடன் உள்ளது. குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவினரை டீன் சங்குமணி பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.