அறந்தாங்கி அருகே தனியார் பேருந்தில் ஏறும்போது மூதாட்டி தவறி விழுந்து பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த முடச்சிக்காட்டை சேர்ந்தவர் ஜெபமாலை மனைவி சந்தானம்மேரி (60). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரத்தில் உள்ள நீதிராஜ் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை அறந்தாங்கியில் இருந்து பேராவூரணிக்கு வந்த தனியார் பேருந்தில், பேராவூரணிக்கு செல்வதற்காக அமரசிம்மேந்திரபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். பேருந்து வந்தபோது, சந்தானம்மேரி முன்பக்க படிக்கட்டில் ஏறியுள்ளார். அவர் ஏறுவதற்குள் பேருந்தை ஓட்டுனர் எடுத்ததால், சந்தானம்மேரி பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகுடி போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.