தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 7 மையங்களில் 4,275 பேர் எழுத உள்ளனர். தேர்வு நடைபெற உள்ள மையங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் கிருமிநாசினி கொண்டு கைகள் கழுவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பிறகு தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் முககவசம் கண்டிப்பாக அணிந்திட வேண்டும். உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வினை எழுதிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறக்கும்படை
இத்தேர்வினை கண்காணிக்க பறக்கும் படை கோட்டாட்சியர் நிலையில் ஒருவரும், நடமாடும் கண்காணிப்பு குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் 2 பேரும், ஆய்வு அலுவலர்கள் 15 பேரும், தேர்வு கூட முதன்மை கண்காணிப்பாளர்கள் 15 பேரும், வீடியோகிராபர்கள் 16 பேரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடையில்லா மின்சாரம் வழங்குவதை மின்சாரத்துறை உறுதி செய்திடவும், தேர்வு மையங்களுக்கு அருகில் தேர்வு நாளன்று வழக்கமான பஸ் நிறுத்தம் இல்லாவிடினும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்வாளர்களுக்கு வசதியாக பஸ்களை நிறுத்தி செல்லவும், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்குவதற்கும், இவற்றை கண்காணித்திடவும் போக்குவரத்துத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு
வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று கருவூலத்தில் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வுகள் நடத்தப்படுவதை வீடியோ பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.