உலகில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ‘குளோபல் பிரவாசி ரிஷ்தா’ என்ற பெயரில் புதிய ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ‘செயலி’யை மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை அளிக்க தகவல் தொடர்பு தளமாக இந்த ‘செயலி’ இருக்கும். இதன் மூலம் முக்கிய அறிவிப்புகள், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும்.
குறிப்பாக நெருக்கடி காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவும் வகையில் இந்த ‘செயலி’ செயல்படும். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் http://pravasirishta.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு அவர் வசிக்கும் நாட்டை குறிப்பிட வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை இணைக்க இதுவரை எந்த தளமும் இல்லை. அதற்கான முயற்சியாக இந்த குளோபல் பிரவாசி ரிஷ்தா என்ற ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை, இந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரை இணைக்கும் 3 வழி தொடர்பாக இந்த ‘செயலி’ இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.