கோபாலப்பட்டிணத்தில் விடாமல் தொடர்ந்து பெய்த மழை.!!




கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில்,  மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழையும், பெரும்பாலான இடங்களில், மிதமான மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்  
11-01-20121 திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அதிகாலை 3 மணியில் இருந்து தொடர்ச்சியாக விட்டு விட்டு காலை 7 மணி வரை மழை பெய்தது பிறகு இடைவேளை விட்ட மழை சரியாக 11 மணியில் இருந்து இரவு  வரை இடைவிடாமல் மிதமான மழையாக பெய்து வருகிறது...அவ்வப்போது இடையில் விட்டு விட்டு கன மழை  பெய்தது.






இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீரோடு மழை நீரும் கலந்து சாலையில் பாய்ந்தோடியது. 

இந்த மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால்  குழந்தைகள் வயதானவர்கள்  மற்றும்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments