நாட்டில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில்குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக அந்த மைதானம் தற்போது சீரமைக்கப்பட்டு தயராகி கொண்டிருக்கிறது. மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை குழாய் சீரமைப்புக்காக குழி தோண்டப்பட்டது. அதனை பொக்லைன் மூலம் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றும் இடம் அருகே இந்த பணி நேற்று நடைபெற்றது.
கலைநிகழ்ச்சிகள் கிடையாது
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டன.
அதேபோல தற்போது குடியரசு தின விழாவிலும் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லை என அரசுத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான வழிமுறைகளை அரசு அறிவிக்கும் என கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை இருக்கும். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.