கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முகப்பில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.
இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் கருவேல மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை தான் நிலத்தடி நீர்மட்டம், பிற மரங்களின் வளர்ச்சிக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முகப்பில் உள்ள கருவேல முன்பகுதியில் காடுபோல் அடர்ந்திருந்த கருவேல மரங்களை கடந்த 27 ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.
அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி மன்ற சார்பில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று நூறு நாள் வேலை மூலம் அங்கு வளர்ந்திருந்த செடிகளை சுத்தம் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முன்பகுதியில் அடர்ந்து காணப்பட்ட கருவேல மரங்களை ஜமாத் நிர்வாகம் JCB உதவியுடன் வேருடன் பிடுகிங்கி அப்பகுதியை சுத்தம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.