கோட்டைப்பட்டினம் மர்கஸூல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி முதலாம் ஆண்டு ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் மகத்தான சாதனை நிகழ்ச்சி வருகிற ஜன.06-ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் முஹ்யித்தீன் ஆண்டகை ஜூம்ஆ பெரியபள்ளிவாசலில் எதிர்வரும் 06.01.2021 புதன்கிழமை காலை சுப்ஹுத் தொழுகையை தொடர்ந்து இரவு இஷா தொழுகை வரை ஏழு அமர்வுகளாக அரபிக்கல்லூரியில் இவ்வாண்டு ஹாபிழ் பட்டம் பெறும் மாணவர் முழு குர்ஆனையும் மனனமாக பொதுமக்கள் முன்னிலையில் ஓதி சமர்ப்பிக்க உள்ளார்.
சாதனை புரியும் மாணவர்:
அல்ஹாபிழ் ஸலாஹுத்தீன் த/பெ.காஜா உசேன், செல்வபுரம், கோயம்புத்தூர்.
அது சமயம் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இறையருள் பெற்று சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த 01.01.2021 அன்று முதல் கீழ்கண்ட வகுப்புகளுக்கு அட்மிசன் நடைபெற்று வருகிறது.
ஜூம்ரா பிரிவு
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குர்ஆன் ஷரீப் சரளமாக ஓத தெரிந்திருக்கவேண்டும்.
ஹிப்ழுப் பிரிவு
குர்ஆன் ஷரீஃப் தெளிவாக ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது.
தொடர்புக்கு: 9842161325, 8300903004, 6382503557
தகவல்:
மர்கஸூல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி
முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள்
கோட்டைப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.