எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கில் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டு விட்டன. பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வேண்டி உள்ளதால் அவர்களது நலன் கருதி பள்ளிகளை திறக்கலமா? என கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் பலர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என அரசு முடிவு செய்தது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த அறிவித்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் வாட்ஸ்-அப், ஆன்-லைன் மூலம், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள். வகுப்புகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை விட்டு அமருதல், முக கவசம் அணிதல் கட்டாயம், கிருமி நாசினிகளை கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதிகூறுகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் பெற்றோர் தரப்பில் பேசியர்களில் பலர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர். சிலர் கூறுகையில், ‘மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை அறிவித்துவிட்டது. மாநில அரசும் தேர்வு நடத்த வேண்டிய நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியம். அதேநேரத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு திறக்கலாம். பொங்கல் பண்டிகை முடிந்த பின் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம். வகுப்புகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்' என்றனர்.
தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் இன்றும் (வியாழக்கிழமை) சில பள்ளிகளில் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின் அவர்களது கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து உள்பட ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் மற்றும் பலர் பங்கேற்று பெற்றோர்களின் கருத்துகளைகேட்டறிந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.