கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கிராமமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே இரளிவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மழை பெய்தால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வடிகால் வாய்க்கால் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் அதனையும் சரி செய்து தர கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் கனமழை பெய்தது.
மேலும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகள் விரைவாக சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.