![]() |
கோப்புப்படம் |
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 45 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் கண்ணாடி பாட்டில் மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு சில படகுகள் லேசான சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த கிருபை, வளன் கவுஷிக், மிக்கோயஸ், கினிங்ஸ்டன், சாம், நியான், பிரைட்டன், கிஷோர், மாரி ஆகிய 9 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் மீனவர் கிருபைக்கு சொந்தமான படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் ராமேசுவரம், தூத்துக்குடி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ராமேசுவரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள 52 மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.