புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் தமுமுக மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலர் MSK.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மாநில செயலர் தொண்டி M.சாதிக்பாட்சா முகாமை தொடங்கி வைத்து தமுமுகவின் மருத்துவ சேவைகள் பற்றி உரை நிகழ்த்தினார். மாநில மீனவர் அணி செயலர் ஜெகதை செய்யது, தமுமுக-மமக பொறுப்பு குழு தலைவர் வழக்கறிஞர் சேக்தாவுது, டாக்டர் செந்தில் ராம், டாக்டர் ரேஸ்மா ரமா, டாக்டர் ராதகிருஸ்னன், டாக்டர் இம்ரான் கான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கிளை தலைவர் செட்டி காஜாமைதின் வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக பொறுப்புகுழு உறுப்பினர்கள் ரபிக், பைசல் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் அபுசாலிஹ், அஜ்மல்கான், நவாஸ்கான், ஜமாத் தலைவர் KS.முகம்மது காசிம் மாணவர் அணி நசீம் கான், அக்ரம், ஜமான், முசரப், அபு சாதாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 40-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர்.
மேலும் அவசர தேவைக்கு இரத்த தானம் செய்ய பலரும் இரத்தபிரிவு கண்டறிந்தனர். இரத்த தானம் செய்த தமுமுக-மமகவினர் பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது. தமுமுக கிளை செயலர் மூசை நெய்னா முகம்மது நன்றி கூறினார்.
தகவல்:
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.