கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் நேற்று இரவு தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையத்தில் கல்யாணராமனை கண்டித்து நேற்று (01-02-2021) மாலை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த யாசின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அன்வர் அவர்களும், R.புதுப்பட்டினத்தை சார்ந்த சேக் தாவூது அவர்களும், கோபாலப்பட்டிணம் இமாம் ஹாஜா அவர்களும், R.புதுப்பட்டினம் இமாம் கௌஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கல்யாணராமனை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரமலான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஆண்களும், பெண்களும் என 300-க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.