அறந்தாங்கி ஒன்றியம் நாகுடியில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் அம்மா பூங்கா திறக்கப்படாததால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.
தமிழக அரசு கிராமப்பகுதி மக்கள் ஓய்வுநேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்காக குழந்தைகள் விளையாட்டு சாதனங்களுடனும், இளைஞர்கள் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவதற்காகவும் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காக்களை உருவாக்கியது. அதேபோல நாகுடி ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை அம்மா பூங்காவை திறக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அம்மா பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்ட புல்தரை, பூச்செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகி வருகின்றன.
மேலும் உடற்பயிற்சி கூடத்தில் அமைக்கப்பட்ட கருவிகளும் பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகின்றன. சமீபத்தில் ஆவுடையார்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். ஆனால் நாகுடியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து பகுஜன்சமாஜ் கட்சி நிர்வாகி சின்னத்துரை கூறியது: நாகுடி மக்கள் ஓய்வு நேரங்களில் பொழுதை கழிப்பதற்காகவும், பெண்கள், ஆண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் தமிழக அரசு அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்களை அமைத்துள்ளது.
தற்போது இந்த பூங்கா ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாகுடியில் மட்டும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகங்களிடம் கேட்டால் அவர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. பூங்கா திறக்காததால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.எனவே மாவட்ட நிர்வாகம் நாகுடியில் திறக்கப்படாமல் வீணாகி வரும் அம்மா பூங்காவை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நாகுடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.