அறந்தாங்கி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் கால்நடைகள் அதிகளவு சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அலுவலர் சேகர் ஆகியோர் மேற்பார்வையில், நகராட்சி பணியாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த 70 மாடுகளை பிடித்து அறந்தாங்கி பூங்கா இடத்தில் அடைத்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாடு வேண்டும் என்றால் பெரிய மாட்டிற்கு ரூ.2 ஆயிரமும், கன்றுக்குட்டிக்கு ரூ.500-ம் அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் அபராதம் செலுத்தி விட்டு அதனை ஓட்டிச்சென்று வீட்டில் பாதுகாப்பாக வளர்க்குமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.