புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் பெண் ஒருவர் லஞ்சம் பெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை கீழராஜா வீதி அருகே உள்ள சாந்தநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.
அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தொழில் செய்யும் புரோகிதர்களிடமும் தலா 1,600 ரூபாய் அவர் வாங்கியிருக்கிறார். இதை தொடர்ந்து, பிச்சைக்காரர்கள் அளித்த தகவலை வைத்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இந்திராணியிடம் இனி பணம் வசூலிக்கக்கூடாது என்று மட்டும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு அவரை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்தும் படி, புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் அனைத்து தொழில்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் பிச்சைக்காரரிடமே லஞ்சம் பெற்ற நிகழ்வானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.