அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு அறந்தாங்கி ஒன்றியம், ஆமாஞ்சி ஊராட்சி, புதுக்காலனியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொரோனா முன்னெச்சரிக்கை, தடுப்பூசிகளுக்கான விழிபுணர்வு, அனைவருக்கும் முகக்கவசம், விழிப்புணர்வு பிரச்சார கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி விரிவான விளக்கமும் அவர்களின் திறன் மேம்படுவதற்காக பயிற்சி வழிமுறைகளும் விளக்கப்பட்டன.
திசைகள் அமைப்பின் தலைவர் Dr.ச.தெட்சிணாமூர்த்தி, கபார்கான், சற்குருநாதன், தாஜிதீன், புவியரசன் உள்ளிட்டோர் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு பற்றியும், திசைகள் அமைப்பின் 16 ஆண்டு கால சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். எவர்கிரீன் பள்ளி தாளாளர் திரு.முபாரக் அலி வரவேற்புரையும், திரு.சுரேஷ்ராஜ் நன்றியுரையும் நிகழ்த்தினர்.
திசைகள் அமைப்பை சார்ந்த மாடசாமி, அண்ணாத்துரை, முகமதுமுபாரக், ரியாஸ், விக்னேஷ் , ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.