ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் நிஸ்வான் மதரஸா சார்பில் வருகிற பிப்.27 நடத்தும் (ஆலிமா) ஆசிரியைகளின் திறன் மேம்பாடு சிறப்பு கூட்டம்.! ஆலிமாக்கள் கலந்து கொள்ள அழைப்பு.!!



ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மக்தப் மதரஸா  ரஹீமா பரக்கத்  நிஸ்வான் மதரஸா ரஹீமா பரக்கத் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் (ஆலிமா) ஆசிரியைகளின் திறன் மேம்பாடு சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மக்தப் மதரஸா  ரஹீமா பரக்கத்  நிஸ்வான் மதரஸா ரஹீமா பரக்கத் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் (ஆலிமா) ஆசிரியைகளின் திறன் மேம்பாடு சிறப்பு கூட்டம் வருகிற 27.02.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மஃரிப் தொழுகை வரை ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் நூரானி காயிதா பயிற்றுவிக்கும் முறை, மக்தப்களின் அமைப்புமுறை திட்டங்கள், பாடத்திட்டத்தின் விளக்கம், ஆசிரியர்கள் - மாணவர்களின் உளவியல் கண்ணோட்டம் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளது. 

அது சமயம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியான கட்டுமாவடி முதல் பொய்யாதநல்லூர் வரை உள்ள மக்தப்கள் நடத்தும் அனைத்து பெண் உஸ்தாத்பீகளும், ஆலிமாக்களும் அவசியம் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வில் மௌலானா மௌலவி.சல்மான் யூசுபி ஹஜரத் (தீனியாத்  தமிழ்நாடு கிழக்கு மண்டல 1 பொருப்பாளர் அய்யம்பேட்டை), மௌலானா மௌலவி.நைனார் முகமது யூசுபி (தீனியாத் தமிழ்நாடு கிழக்கு மண்டல 2 பொருப்பாளர் அய்யம்பேட்டை),மௌலானா மௌலவி.J.முகமது மைதீன் தாவூதி (தலைமை ஆசிரியர் ரஹீமா பரக்கத் மதரஸா ஏம்பக்கோட்டை) உலமாக்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.....

முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 8883286170

இப்படிக்கு..
ரஹீமா பரக்கத் மதரஸா, ஏம்பக்கோட்டை

தகவல்: மௌலானா மௌலவி.J.முகமது மைதீன் தாவூதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments