திமுகவில் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிட இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் விருப்ப மனு அளித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுகவில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் கடந்த 17-ந் தேதி முதல் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்த விருப்ப மனுவை வரும் 24-ந் தேதி வரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிப்ரவரி 28-ந் தேதி வரை விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கு இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் விருப்ப மனு அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த விருப்ப மனுவை போஸ் வெங்கட் இன்று கொடுத்தார். திமுகவின் தலைமை கழக பேச்சாளராக போஸ் வெங்கட் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.