கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தெற்கு புதுக்குடி பகுதியில் ஒருவர் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை அழைத்த போது, அவர் அங்கு இருந்து ஓடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கடல் குதிரைகள் இருந்தன. அவைகள் 4 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த குருசாமி (வயது 38) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடல் குதிரைகளையும், குருசாமியையும் அறந்தாங்கி வனசரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.