அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான குட்கா, பான் மசாலா போன்றவை தடையின்றி கிடைப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான புற்றுநோயை உருவாக்கக் கூடிய குட்கா, பான் மசாலா போன்றவற்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு தடை செய்தது.
அரசால் தடைசெய்யப்பட்டாலும் தமிழகம் முழுதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை ஆமோகமாக நடந்து வருகின்றது. எனவே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பெட்டிக்கடை முதல் மளிகை கடை வரை தடை செய்யப்பட்ட போதை பொருள் தடையின்றி கிடைக்கிறது.
ஆனால் ஒரு பாக்கெட்டின் விலை 300 மடங்கு அதிகரித்து விற்பனை செய்கின்றனர். காவல்துறையினர் பெயரளவில் கடைகளில் ஆய்வு செய்து ஒரு சில பாக்கெட்டுகளை பறிமுதல் செய்கின்றனர். இருப்பினும் குட்கா விற்பனையை தடுக்க முடியவில்லை. எனவே காவல்துறையினர் உடனே அறந்தாங்கி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.