திருச்சி விமான நிலையம் அருகே, காவேரி நகர் பகுதியில் உள்ள காலி மனை ஒன்றில் இன்று காலை 7 மணி அளவில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அவ்வழியே சென்றவர்கள் உடனடியாகக் காவல் துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார், ஒரு சாக்குப் பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து சாக்குப் பையைப் பிரித்துப் பார்த்த போது அதில் ஏழு மாத குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து விமானநிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் பெண் குழந்தையைச் சாக்குப்பையில் கட்டி காலி மனையில் வீசிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையை காலி மனையில் வீசியவர்கள் யார் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.