ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட தாழானூர் ஊராட்சியில், பரிவீர மங்களம் ஆதிதிராவிட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் 3 முறை மனு அளித்தும், முதல்-அமைச்சருக்கு 2 முறையும், ஆதிதிராவிட அமைச்சருக்கு 2 முறையும், ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு 10 முறையும் மனு கொடுத்து உள்ளோம்.
அதன் பிறகு பொதுமக்கள், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு பஸ் மறியல் செய்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு கமிட்டி அமைத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக விளம்பர பதாகை ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு வைத்துள்ளனர். அந்த பதாகையில், இந்த முறை நிச்சயம் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று கூறியுள்ளனர்.
இந்த பதாகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் இ்ங்கு விளம்பர பதாகை வைக்க கூடாது, உங்கள் ஊருக்கு கொண்டு சென்று வையுங்கள் என்று கூறினர். பின்னர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்று விளம்பர பதாகையை வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.