மணமேல்குடி ஒன்றியத்தில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் அபராதம்




மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் பொது குழாய்களில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் ஏற்படுத்த கூடாது. மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கக் கூடாது. இதுகுறித்து கண்டறியப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பதோடு காவல்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களுக்கு மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments