கரகத்தி கோட்டை அருகே மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்.!



கோட்டைப்பட்டினம் போலீசார் கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரகத்தி கோட்டை அருகே உள்ள மேல பாபனூர் கிராமத்தில் வந்த சரக்கு வேனை போலீசார் மறித்தனர். அப்போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 

மேலும் சரக்கு வேனை பறிமுதல் செய்து, வீரமங்கலம் பகுதியை சேர்ந்த டிரைவர் புகழேந்தி (வயது 32) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments