கோட்டைப்பட்டினத்தில் பாலியல் வன்கொடுமை சம்மதமாக புகார் அளிப்பது எவ்வாறு என்ற விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா நிகழ்ச்சி.!



கோட்டைப்பட்டினத்தில் பாலியல் வன்கொடுமை சம்மதமாக புகார் அளிப்பது எவ்வாறு என்ற விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நேற்று 13.02.2021 பாலியல் வன்கொடுமை சம்மதமாக புகார் அளிப்பது எவ்வாறு என்ற விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்டைப்பட்டிணம் அரசு மேல் நிலைப்பள்ளி, பெண்கள் பள்ளி, காலனி பள்ளி, ஆசிரியர் பெருந்தகைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், கோட்டைப்பட்டிணத்தில் இயங்கி வரும் முதியோர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் காப்பக பணியாள்கள், நிர்வாகிகள், பொருப்பாளர்கள், காவல்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு, நிகழ்ச்சியிலே சிறப்புரையாற்றிய சொற்ப்பொழிவுகளை செவியுற்று அதன் மூலமாக பல நல்ல தகவல்களையும் கேட்டறிந்து பயனடைந்து சென்றனர்.

இந்நிகழ்வை வெளிநாடு வாழ் கோட்டைப்பட்டிணம் முஸ்லிம் சகோதரர்கள் சங்கம் மற்றும் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் ஏற்பாடு செய்திருந்ததனர்.

தகவல்: அஜித்மீர் கான்,கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments